முக்கிய கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், சுயேச்சையாக களத்தில் குதித்து, தங்களது பலத்தை நிரூபிக்க முனைப்பு காட்டி வருகின்றனர். ஒருசில கட்சிகளில், நிர்வாகிகளின் எதிர்ப்பால் வேட்பாளர் மாற்றமும் நிகழ்ந்துள்ளது. ஆனால் மாங்கனி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியில், உட்கட்சி பூசலால் வேட்பாளர் ஒருவரே ஜகா வாங்கிய கூத்தும் நடந்துள்ளது. அந்த மாவட்டத்தின் தெற்கு தொகுதிக்கான வேட்பாளராக மணிகண்டன் என்பவர் அறிவிக்கப்பட்டார். உற்சாகமடைந்த அவர், ஆர்வத்துடன் தேர்தல் பணிகளை தொடங்கினார். குறிப்பாக, தனது வேட்புமனு தாக்கலுக்கு வித்தியாசமாக வந்து கவனம் ஈர்க்க முடிவெடுத்த அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊரையே சுத்தப்படுத்துவோம்’ எனக்கூறி, கையில் சாக்கடை அள்ளும் மம்பட்டியை தூக்கி வந்தார்.