அனைத்து அரசியல் கட்சிக் கூட்டங்களிலும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்: உள்துறை செயலர் பதிலளிக்கவும் உத்தரவு

மதுரை: மதுரை, அண்ணாநகரைச் ேசர்ந்த வக்கீல் முகம்மது ரஷ்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை உருவாகியுள்ளது. எனவே கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘‘அனைத்து அரசியல் கட்சி கூட்டங்களிலும் பாகுபாடின்றி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், உள்துறைச் செயலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: