அதிமுக ஆட்சியில் மக்கள் நரக வாழ்க்கை : மேலப்பாளையத்தில் சீமான் ஆவேசம்

நெல்லை : சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாளை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாத்திமாவை ஆதரித்து மேலப்பாளையம் பஜார் திடலில் அக்கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில் ‘‘தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஊழலைத்தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.

மேலும் மக்கள் அனைவரும் நரக வாழ்க்கை வாழ்கின்றனர். ஆட்சி முடிவதற்கு ஒரு  வாரத்திற்கு முன் விவசாயி நகை கடன் தள்ளுபடி செய்கின்றனர். விவசாயி கடனாளி ஆகாமல் பார்த்துக்கொள்ள அரசுக்கு வழி இல்லை. அதிமுகவின் ஊழல் ஆட்சியில் சிக்கி மக்கள் நரக வாழ்க்கை  வாழ்கின்றனர்.

கல்வியையும், மருத்துவத்தையும் தனியார் மயமாக்கிவிட்டனர்’’ என்றார்.

Related Stories: