கோவில்பட்டி: தேர்தல் தோல்விக்கு பயந்து என்னை கொல்ல முயற்சி நடப்பதாக அமமுகவினர் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். நேற்றிரவு அமமுகவினர் எனது காரை வழிமறித்தனர். தடுத்து நிறுத்தி என் கார் மீது அமமுகவினர் வெடிகளை எறிந்தனர் எனவும் குற்றம் சாடினார்.