சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் நகர் தெற்கு பகுதி 137 வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 28 கிலோ மீட்டர் நடந்தே வீடு வீடாக சென்று, கலைஞர் அரசின் முந்தைய சாதனைகளையும், அதிமுக அரசின் 10 ஆண்டு வேதனைகளையும் எடுத்துரைத்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்ற திமுக தேர்தல் அறிக்கையை விளக்கி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள், ‘இங்கு அடையாறு ஆற்றங்கரையை ஒட்டி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும். கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். பட்டா பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், என கூறினர். இவற்றை கேட்ட பிரபாகர் ராஜா, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.