2 மணி நேர பிரசாரத்துக்கு ‘தலைக்கு’ ரூ.300, ஒரு குவாட்டர்: பணத்தை வாரி இறைக்கும் அதிமுக

சோழிங்கநல்லூர் தொகுதியில் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் பணத்தை வாரி இறைக்கிறாராம். முதலில் வேட்பாளருடன் தேர்தல் பிரசாரத்திற்கு கட்சியினர் பலர் கூட்டமாக வந்தனர். அவர்களுக்கு பணம் கொடுக்காததால் படிப்படியாக பிரசாரத்திற்கு வேட்பாளருடன் வருவதை தவிர்த்துவிட்டு சொந்த வேலை பார்க்க சென்றுவிட்டனர். இப்படியே ெசன்றால் நமக்கு ஓட்டு கிடைக்காது. சுயேச்சை வேட்பாளர்கள் போல் நமது நிலைமை மாறிவிடும் என்று வேட்பாளர் தனது கூட்டணி கட்சியினரை கடிந்துவிட்டார்.

பிறகு வேறு வழியின்றி தெரு பிரசாரத்திற்கு 2 மணி நேரம் பெண்கள் வந்தால் ரூ.300ம், பிரியாணி பொட்டலமும், ஆண்களுக்கு ரூ.300 உடன் ஒரு குவாட்டர் பாட்டில் என்று ‘ஆபர்’ கொடுத்துள்ளார். அதன் பிறகு சேர்ந்த கூட்டத்தை  காட்டி பிரசாரம் செய்து வருகிறாராம் அதிமுக வேட்பாளர். சாலை பிரசாரத்திற்கு பைக்குடன் வரும் நபருக்கு ஒரு லிட்டர் பெட்ரோலும் ரூ.500ம், அதே ஆட்டோவில் வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோலுடன் ரூ.600ம் வழங்கப்படுகிறதாம். 2 மணி நேரத்தில் யார் தருவார் ரூ.300 என்பதால் வேட்பாளருடன் தொகுதி முழுவதும் கூலி வேலைக்கு செல்லும் நபர்கள் சுற்றி வருகிறார்களாம்.

Related Stories: