திருத்தணி: திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகம், வேளாண்மை அலுவலகம் மற்றும் சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் திருவாலங்காடு என்பதற்கு பதிலாக திருவுலாங்காடு என்று தவறாக வைத்துள்ளனர். இதை மாநில தமிழ் வளர்ச்சிக் கழக இயக்குனர் விஜயராகவன் கோவிலுக்கு வரும்போது அந்த பெயரை பார்த்துள்ளார். இதையடுத்து உடனடியாக தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகளை வரவழைத்து எழுத்துப்பிழையை சரி செய்துள்ளார். இதுபோல் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முஸ்லிம் நகர், இஸ்லிம் நகர் என்றும் லட்சுமாபுரம் லட்சுமிபுரம் என்று தவறாக பெயர்பலகை வைத்துள்ளனர்.