சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மிகவும் பாவப்பட்ட மக்கள் வாழும் தொகுதி திருவிநகர் தொகுதி என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு அடிப்படை வசதிகள் இல்லாத தொகுதி என்றால் அது திருவிக நகர் தொகுதிக்கு பொருந்தும். சிறு மழைக்கே கழிவுநீர் வீடுகளில் புகுந்து கடும் துர்நாற்றம் வீசும் நிலை தான் உள்ளது. எப்போதும் புளியந்தோப்பு பகுதியில் ஏதாவது ஒரு சாலையில் கழிவுநீர் தெருக்களில் தேங்கி இருப்பதை பார்க்கலாம். மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப பாதாள சாக்கடை வசதியை அதிகாரிகள் விரிவுப்படுத்தாதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.