திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக ஒரேநாளில் ரூ5.21 கோடியை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள வாரி உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். சிலர் கோயிலுக்கு பணம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். மேலும், பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர்.