இந்தியா உ.பி. மயானத்தில் கும்பல் கும்பலாக எரிக்கப்படும் கொரோனா சடலங்கள்!: பார்ப்பவர்களை பதறவைக்கும் அதிர்ச்சி காட்சி வெளியீடு..!! May 16, 2021 லக்னோ கொரோனா உத்திரப்பிரதேசம் உ.பி. லக்னோ: உத்திரபிரதேசம் மாநிலம் மயானம் ஒன்றில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் கும்பல் கும்பலாக எரிக்கப்படும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. தேசிய விருதுப்பெற்ற திரைப்பட இயக்குனரும், பத்திரிகையாளருமான வினோத் கபிரி, தனது ட்விட்டர் பக்கத்தில் உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரில் உள்ள மயானம் ஒன்றில் ஏராளமான சடலங்கள் எரியூட்டப்படும் காட்சிகளை வெளியிட்டுள்ளார். கொரோனாவால் உயிரிழக்கும் லட்சக்கணக்கானோருக்கு யாரும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் வினோத் கபிரி வெளியிட்ட வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ், அதிர்ச்சி தரும் இந்த காட்சிகளை பார்க்கும் போதே கண்ணீர் வருவதாக குறிப்பிட்டுள்ளார். உத்திரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு கூறி வரும் நிலையில், சடலங்கள் மொத்தமாக எரியூட்டப்படும் காட்சிகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனப்படுகொலை காலத்துக்கு நிகராக உத்திரப்பிரதேசத்தில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பின் உண்மையான நிலவரத்தை உத்திரபிரதேச பாஜக அரசு மறைப்பதாகவும் நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். … The post உ.பி. மயானத்தில் கும்பல் கும்பலாக எரிக்கப்படும் கொரோனா சடலங்கள்!: பார்ப்பவர்களை பதறவைக்கும் அதிர்ச்சி காட்சி வெளியீடு..!! appeared first on Dinakaran.
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த புகாரில் எச்.ராஜா மீது பதிவான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!!
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த புகாரில் எச்.ராஜா மீது பதிவான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
“விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்?”: பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
கேரளாவில் கர்ப்பிணிகளுக்கான அழகி போட்டியில் உற்சாகம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை அமலாபால்
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்பு :கொளுத்தும் வெயிலுக்கு நடுவே வானிலை மையம் “ஜில்” அறிவிப்பு!!
மழையால் ஏற்பட்ட விபரீதம்: கேரளாவில் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்ற பெண் நோயாளி உயிரிழப்பு!!