ஊட்டி : ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் வளர்ந்துள்ள அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
ஊட்டியில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான மக்கள் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு சிகிச்சைகளுக்காக வருகின்றனர். இம்மருத்துவமனை வளாகத்தில், ஏராளமான ராட்சத மரங்கள் வளர்ந்துள்ளன. காற்று மற்றும் மழைக்காலங்களில் இந்த மரங்கள் விழுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், இந்த மரங்களை அகற்ற வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.