அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்தான் எம்.எல்.ஏ.,: அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

குமாராபளையம்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று மாலை மின்துறை அமைச்சர் தங்கமணி அளித்த பேட்டி: சந்திரசேகரன் 2009ல் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தார். அவருக்கு உரிய மரியாதையை கட்சி கொடுத்து வந்தது. ஆனால் அவர் இப்போது சுயேச்சையாக போட்டியிடுகிறார். தொகுதியில் அவருக்கென செல்வாக்கு இல்லை. ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரம் ஓட்டுகளை பெறுவார். அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறுவது பொதுமக்களிடம் இருந்து அனுதாபத்தை பெறுவதற்காகவே. என்னை பற்றி உங்களுக்கு தெரியும். இதுவரை யாரையும் நான் கடுமையாக பேசியதில்லை. ஆனால் அவர்தான் வனத்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதோ இந்த செல்போனில் அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது என்றார்.

Related Stories: