அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டி: தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ இன்று வேட்புமனு தாக்கல்

ஈரோடு : பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தோப்பு வெங்கடாச்சலம் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் ஜெயலலிதா  அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், பெருந்துறை வேட்பாளராக 3வது முறையும் தோப்பு வெங்கடாச்சலம்  அறிவிக்கப்படுவார் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமாரை வேட்பாளராக அதிமுக  தலைமை அறிவித்தது.

 

இது  தொடர்பாக கடந்த 2 நாட்களாக ஆதரவாளர்களிடம் தோப்பு வெங்கடாச்சலம் ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில்  பெருந்துறை தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால், பொதுமக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்பதால், சுயேச்சையாக  போட்டியிட வேண்டும் என்று ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அதிமுக அறிவித்துள்ள வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக  பெருந்துறை தொகுதியில் போட்டியிடுவது எனவும், இதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.

Related Stories: