கரூர் தேமுதிக வேட்பாளர் மாற்றம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஏ.ரவி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கஸ்தூரி என்.தங்கராஜ் நியமிக்கப்படுகிறார் என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கை: சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஏ.ரவி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கஸ்தூரி என்.தங்கராஜ் நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவருக்கு தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், அமமுக கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு பொதுமக்களின் பேராதரவை திரட்டி கழக வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும்.

Related Stories: