டெல்லி: உலகில் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. சுசர்லாந்து நாட்டை சேர்ந்த ஐ.கியூ. ஏர் என்ற நிறுவனம் உலக காற்றுத் தர அறிக்கை 2020 என்ற ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து இந்தியா பிரதான இடம் பிடித்திருப்பதும், உலகிலேயே அதிக மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதாவது சீனாவின் சிங் கியான் நகரத்திற்கு பிறகு 9 இடங்களில், இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத், குலஞ்சர், பெஸ்ரப், ஜலால்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ ஆகிய நகரங்களும், ராஜஸ்தான் மாநிலத்தின் திவாரி மற்றும் தலைநகர் டெல்லி ஆகியவை பிடித்துள்ளன.