லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகிறார். கடந்த ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். அந்த நேரத்தில் தனது நாட்டில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவியதால், அவர் தனது பயணத்தை ரத்து செய்தார். இந்நிலையில், அடுத்த மாதம் இறுதியில் அவர் இந்தியா வருவதாக. அவருடைய அலுவலகம் நேற்ற அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகிய பின்னர், போரிஸ் மேற்கொள்ள இருக்கும் முதல் சர்வதேச சுற்றுப்பயணம் இதுவாகும்.