ஹைதராபாத்: அமராவதி நில முறைகேடு வழக்கில், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கும் ஆந்திர மாநிலத்தின் குற்ற புலனாய்வுத்துறை, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வரும் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்க திட்டமிட்டார். தலைநகர் அமராவதியை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தினார். ஆனால் கடந்த ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்தவுடன் அமராவதி திட்டத்தை ரத்து செய்து புதிதாக 3 தலைநகரங்களை அமைக்க திட்டமிட்டார்.