சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து திண்ணை பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றும், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் விரோத பாஜ, அதிமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும், தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும், நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டும், திமுக தேர்தல் அறிக்கை குறித்து திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும், சாந்தன்,