நாகை: நாகையில் பெண் காவலரின் கன்னத்தை கடித்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த ஒருவர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். பணி முடித்து ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு வந்த அவரை நாகூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிவக்குமார் தடுத்து நிறுத்தியுள்ளார். அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு கன்னத்தை கடித்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் காவலர் சிவக்குமாரை கைது செய்துள்ளனர்.