சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சென்னையில் காலமானார். 61 வயதான அவர்; அண்மையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும், பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.