சென்னை: பணம் வாங்கி கொண்டு வேட்பாளர் தேர்வு நடப்பதாக கூறி காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணு பிரசாத், சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர்கள் பட்டியலுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் ெடல்லி சென்றுள்ளனர். அங்கு, நடைபெறும் தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.