வீரவநல்லூர் : பாளை. -அம்பை நெடுஞ்சாலையில் வீரவநல்லூர் கோமதி மில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மாலை அதிகாரி சங்கரகுமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழையபேட்டையில் இருந்து அம்பை நோக்கி சென்ற டூவிலரை மறித்து சோதனை செய்தனர். அதில் முறையான ஆவணங்கள் இன்றி 65 பழைய செல்போன்கள் மற்றும் 50 பேட்டரிகள் கொண்டு செல்வது தெரிய வந்தது.