சின்னாளபட்டி : சின்னாளபட்டி அருகே பஞ்சம்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மண் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சின்னாளபட்டி எஸ்ஐ பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் மண் அள்ளி கொண்டிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.