சின்னாளபட்டி தோட்டத்தில் மண் திருடியவர் கைது-3 லாரிகள் பறிமுதல்

சின்னாளபட்டி : சின்னாளபட்டி அருகே பஞ்சம்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மண் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சின்னாளபட்டி எஸ்ஐ பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் மண் அள்ளி கொண்டிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.

டிரைவர் தங்கராஜ் மட்டுமே சிக்கினார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து, மண் அள்ள பயன்படுத்திய 3 டிப்பர் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து சின்னாளபட்டி காவல்நிலையம் கொண்டு வந்தனர். மேலும் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: