சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் விருதுநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த சாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ எம்எஸ்ஆர். ராஜவர்மன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

Related Stories: