சென்னை: தமிழக சட்ட பேரவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்ெசயலாளர் வைகோ இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 6 தொகுதிகளிலும் திமுக சின்னத்தில் போட்டியிட மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மதிமுக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பாக ேபச்சுவார்த்தை நடத்தப்பட்டன. அதன்படி, திமுக கூட்டணியில் போட்டியிடும் 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. மதுராந்தகம், வாசுதேவநல்லூர், சாத்தூர், அரியலூர், மதுரை தெற்கு, பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.