தகார்: செனேகல் நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான செனேகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மானே சோன்கோவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தகார் உட்பட நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டான்.