அரூர் : அரூர் பகுதியில், மக்காச்சோளம் அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டம் அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, தீர்த்தமலை, கோட்டப்பட்டி மொரப்பூர், கம்பைநல்லுர், உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தற்போது அறுவடை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.