பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

சத்தியமங்கலம் :ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா வரும் 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி 30ம் தேதி நடைபெற உள்ளது. திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பதால் கோவில் வளாகத்தில் உள்ள காலி இடத்தை நேற்று 20க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

இதேபோல், பவானிசாகர்-பண்ணாரி சாலையில் ராஜன்நகர் பகுதியில் வாகனங்களை பார்க்கிங் செய்ய வசதியாக தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களை சமன்படுத்தி சுத்தப்படுத்தும் பணியும் நடந்தது. குண்டம் திருவிழா தொடங்க உள்ளதால் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: