சிங்கம்புணரி: பாஜகவின் தலையாட்டி பொம்மைகளாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளனர் என்று சிங்கம்புணரியில் நடந்த காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கட்டுகுடிபட்டியில் காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் தலைமை வகித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறவேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றோம்.