நாகர்கோவில்: தொலைபேசியில் அழைத்து தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ குமரி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ, குமரி மாவட்ட எஸ்.பி.யிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் இருந்து வருவதுடன் கடந்த பல ஆண்டுகளாக குமரி மாவட்ட திமுக செயலாளராக இருந்து வருகிறேன். 10 ஆண்டுகள் தமிழக அமைச்சராகவும் இருந்துள்ளேன்.