திமுக எம்.எல்.ஏ.வுக்கு செல்போனில் கொலை மிரட்டல்

 நாகர்கோவில்: தொலைபேசியில் அழைத்து தனக்கு தொடர்ந்து  கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ குமரி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ, குமரி மாவட்ட எஸ்.பி.யிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் இருந்து வருவதுடன் கடந்த பல ஆண்டுகளாக குமரி மாவட்ட திமுக செயலாளராக இருந்து வருகிறேன். 10 ஆண்டுகள் தமிழக அமைச்சராகவும் இருந்துள்ளேன்.

கடந்த 4ம் தேதி மாலை 4 மணிக்கு எனது தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் நான் எழுத்தாளர் மூர்த்தி, மேல்மருவத்தூரில் இருந்து பேசுவதாக சொல்லி என்னை அசிங்கமாகவும், கேவலமாகவும் பேசி மிரட்டினார். மீண்டும் மீண்டும் பல முறை மூன்று வெவ்வேறு போன் எண்களில் இருந்து என்னை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார். எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: