காரைக்குடி: தேர்தலில் பாஜ போட்டியிடும் 20 இடங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: பாஜ என்ற நச்சு இயக்கம், விஷ செடி மேலும் பரவக்கூடாது. தமிழகத்தில் அவர்கள் கால் ஊன்றக்கூடாது. பாஜவுக்கு அதிமுக அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டது. 20 இடங்களில் அவர்களுக்கு போட்டியிட வேட்பாளர்கள் கூட கிடையாது. மிருக பணபலம், அதிகார பலத்தை வைத்து தொகுதியை வாங்கி உள்ளனர்.