‘ஏம்பா... நான் சரியா பேசுறேனா?’டவுட் கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன்

மேடையில் பேசினாலும், பேட்டி அளித்தாலும், பொது நிகழ்ச்சிக்கு போனாலும் சர்ச்சையாகவே பேசுபவர் என பெயரெடுத்தவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஏதாவது ஏடாகூடமாக பேசி ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருவதாக கூறி, அதிமுக தலைமையும் இவர் மீது கோபத்தில் இருக்கிறது. இதனால் உஷாராக பேச வேண்டுமென்ற எண்ணத்தில் இவரது செயல்பாடுகள் அதிமுகவினருக்கு இன்னும் சிரிப்பையே வரவழைத்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக எம்எல்ஏ பரமசிவம் பங்கேற்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், தனக்கு பின்னால் அமர்ந்திருந்த அதிகாரிகள், எம்எல்ஏ பரமசிவம் ஆகியோரைப் பார்த்து ஒவ்வொரு முறையும், ‘நான் பேசுவது சரியா? சரியாகத்தானே பேசுறேன்...’ என வடிவேலு பட காமெடி போல கேட்டுக்கொண்டே வந்தார். இதைக்கண்ட அதிமுகவினர் சிரித்தே விட்டனர். ‘எத்தனை தடவை நம்ம கிட்டே சரியான்னு கேட்டாலும், சரியில்லாமல் சர்ச்சையாக பேசி மாட்டிக் கொள்ளத்தான் போகிறார்... இதுல சரியான்னு கேள்வி வேற...’ என்று கமெண்ட் அடித்தனர்.

Related Stories: