மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. இப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் மாலை கெத்தையில் குட்டியுடன் தாய் யானை உள்பட இரண்டு யானைகள் சாலையோரம் இருந்த செடி, கொடிகளை பிடுங்கி தின்று கொண்டிருந்தது. அப்போது, களைப்படைந்த யானை குட்டி நடு ரோட்டில் படுத்து விட்டது. இதைத்தொடர்ந்து அதன் தாயும் மற்றொரு யானையும் குட்டிக்கு காவலாக அதன் அருகிலேயே நின்றன. இதனால், அவ்வழியாக இரண்டு வாகனங்களில் திருமண கோஷ்டியினர் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர்.