பூந்தமல்லி: சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து பழைய இரும்பு சேனல்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி செம்பரம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அதிக பாரம் ஏற்றி வந்ததால் ஏற்பட்ட அழுத்தம் தாங்க முடியாமல் எதிர்பாaராத விதமாக திடீரென டயர் வெடித்தது. இதனால் லாரி தலைகுப்புற கவிழ்ந்து இரும்பு தளவாடங்கள் சாலையில் உருண்டு விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனர் சாந்தகுமார் எந்த ஒரு காயமின்றி உயிர் தப்பினார்.