சென்னை: நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப் வீடுகள் உட்பட முக்கிய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், சுமார் ₹650 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்ததாக கண்டுபிடித்துள்ளனர். நடிகை டாப்சி பன்னு, இயக்குநரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் ஆகியோர் பல்வேறு சமூக பிரச்னைகள் குறித்து சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வந்தனர். இந்த சூழ்நிலையில், நடிகை டாப்சி பன்னு, இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் பிரபலங்கள் வீடுகள், சினிமா நிறுவனங்களில் மும்பை மற்றும் புனேயில் சுமார் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி ரெய்டு நடத்தினர். இதுபோல், டேலன்ட் ஏஜென்சீஸ் எக்சீட் என்டர்டெயின்மென்ட்டிலும் சோதனை நடந்தது. சோதனை நேற்றும் நீடித்தது.