சென்னை: சசிகலா இணைப்பை அதிமுகவை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்தான் முடிவெடுப்பார்கள் என்று பாஜ தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறினார். சென்னையில் தமிழக பாஜ தலைமை அலுவலமான கமலாலயத்தில் பாஜ தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் சசிகலாவை இணைப்பது பற்றி கேட்கிறீர்கள். சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரது பலமும், பலவீனமும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும்.