சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று இரவு மயிலை மாங்கொல்லையில் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: தகுதியற்றவர்கள் ஆட்சி செய்யும் இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களை அகற்ற வேண்டிய நேரம் இது. தமிழர்கள் மந்த புத்திக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டு புதிதாக பலர் எங்கிருந்தெல்லாமோ கிளம்பி வருகிறார்கள். தமிழ் கற்க முடியவில்லையே என்று வருந்துகிறார்கள். திருக்குறளை தப்பு தப்பாக சொல்கிறார்கள். இதற்கு மார்க் போடுவோமே தவிர ஓட்டுப் போட மாட்டோம். காஷ்மீர் தொப்பி வைத்துக் கொண்டால் காஷ்மீரியாகி விடுவதும், நாகலாந்து கொம்பு வைத்துக் கொண்டால் நாகாலாந்துகாரராகி விடுவதும் அந்தக் கால அரசியல்.