விழுப்புரம்: அதிமுக - பாஜக கூட்டணி என்பது மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் கூட்டணியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். விழுப்புரத்தில் சிங்காரவேலர் சிலைக்கு அடிக்கல் நாட்டி, உருவப்படத்தை திறந்து வைத்து அமித்ஷா மரியாதை செலுத்தினார். பின்னர், விழுப்புரத்தில் ஜானகிபுரத்தில் பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில்; ஏழை, எளிய மக்களுக்கக்கான அரசாக மத்திய பாஜக ஆட்சி உள்ளது. நாட்டின் தொன்மையான மொழி தமிழில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது. திருவள்ளுவரை பற்றிய அறியவும், தமிழில் பேசவும் விருப்பம் என பிரதமரும் தெரிவித்துள்ளார்.