சென்னை வந்தார் அமித்ஷா: தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட 6 நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் உட்பட 6 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜ கட்சியின் சார்பில் இன்று விழுப்புரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்றிரவு 10.45 மணிக்கு சென்னை வந்தார். அவர் எம்.ஆர்.சி. நகர் லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் தங்கினார். இன்று காலை புதுச்சேரி செல்லும் அவர் முதல் நிகழ்ச்சியாக காலை 10.30 மணி அளவில் புதுவை காரைக்காலில் நடைபெறும் பாஜவின் மையக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.அடுத்து, காலை 11.30 மணிக்கு காரைக்காலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

 3வது நிகழ்ச்சியாக நண்பகல் 1.30 மணிக்கு காரைக்காலில் பாஜ மண்டல் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்திலும், 4வதாக மாலை 3.45 மணிக்கு விழுப்புரம்  தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெறும் பாஜ மாநில மையக்குழு கூட்டத்திலும், 5வது நிகழ்ச்சியாக விழுப்புரம் ஜானகிபுரத்தில் மாலை 5 மணிக்கு விஜய் சங்கல்ப யாத்திரையிலும், 6வதாக விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் இரவு 7 மணிக்கு நடைபெறும் தமிழக பாஜ மற்றும் நிர்வாகிகள்  கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

Related Stories: