கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அருகே நடந்த மாடு விடும் விழாவில் முதலிடம் பிடித்த காளைக்கு ₹75 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
கே.வி.குப்பம் அடுத்த வேலம்பட்டு பகுதியில் 55ம் ஆண்டு மாடு விடும் விழா நடந்தது. ஆர்.டி.ஓ ேஷக் மன்சூர் தலைமையில் விழாக்குழுவினர் உறுதி மொழி ஏற்றப்பின்னர் விழா தொடங்கியது. விழாவில், கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின் காளைகள் பங்கேற்று ஓட அனுமதிக்கப்பட்டன. விழாவில், 125க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.