விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருசக்கர வாகனம் தீப்பிடித்து இருவர் பலி..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருசக்கர வாகனம் தீப்பிடித்து இருவர் பலியாகினர். கிருஷ்ணன்கோவில் பகுதியில் கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் கணவன் - மனைவி இருவர் பலியாகினர். குன்னூரை சேர்ந்த ராஜேந்திரன் - கற்பகம் தம்பதி உடல் கருகி உயிரிழந்தனர்.

Related Stories: