இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்..!!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார். அவருக்கு வயது (89). உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலையில் அவரது உயிர் பிரிந்தது. 1932 செப்டம்பர் 25ம் தேதி உசிலம்பட்டியில் பிறந்தவர் தா,பாண்டியன். 1989, 1992 ஆகிய இருமுறை வடசென்னை மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

Related Stories: