சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தா.பாண்டியனின் உடல்நிலை கவலைகிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெண்டிலேட்டர் உதவியுடன் இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் காரணமாக தா.பாண்டியன் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.