கூவத்தூரில் பட்டபாடு... பெரும்பாடு... கடம்பூர் ராஜூ பிளாஷ்பேக்

கோவில்பட்டியில் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசியது: கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு அமைச்சர் என்ற அந்தஸ்தினை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பின்னர் இந்த ஆட்சி நீடிக்குமா, தாக்குப் பிடிக்குமா? என்ற எண்ணம் மக்களை போன்று எங்களுக்கும் இருந்தது. 18 எம்எல்ஏக்கள் ஒருபுறம் போனார்கள், 11 எம்.எல்.ஏக்கள் இன்னொரு புறம் போனார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இந்த ஆட்சி போய் விடும் என்று கூறினார்கள். ஏனென்றால் அது போன்ற சூழ்நிலை. ஒவ்வொருத்தரையும் பிடிச்சு வைச்சு கூவத்தூரில் பட்டபாடு பெரும்பாடு. தெய்வாதீனமாக மக்களவை தேர்தலுக்கு பின்னர் தான் ஒரு நிலைப்பாட்டில் நிலைத்த ஆட்சியாக, நீடித்த ஆட்சியாக மாறியது. அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்ட வேண்டும். எல்லா பிரச்னைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல், அறிவு முதல்வரிடம் உள்ளது. இவ்வாறு கடம்பூர் ராஜூ பேசினார்.

Related Stories: