இடைப்பாடி : மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை ஆகிய நீர்மின் கதவணை வழியாக பவானி, திருச்சி, தஞ்சாவூர் வழியாக டெல்டா பாசனத்திற்கு செல்கிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்கு மட்டும் 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.