நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் தொகுதி வாரியாக வெளிமாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரு தொகுதியில் நடந்தது. அந்த தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக வடமாநிலத்தை சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டு இருந்தார். அவரிடன் ஆட்டத்தை பார்த்து மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் அலறிவிட்டனர். அதாவது, ஸ்டார் ஹோட்டலில் தான் தங்கினார். பிறகு வேலூரில் இங்கிருந்து கார் மூலம் சென்னைக்கு சென்றார். தொடர்ந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார். இதற்கிடையில் அங்கிருந்து அதே காரில் மதுரை விமான நிலையத்திற்கு சென்றார். இதையடுத்து குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார். பின்னர் அங்கிருந்து கொச்சி போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றார்.