கண்டா வரச் சொல்லுங்க..! வண்ணாரப்பேட்டை பி.நாகு (அச்சக உரிமையாளர்)

ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதோடு சரி தொகுதி பக்கம் அவர் வருவதே இல்லை. மேலும் இந்த தொகுதியில் சாலை வசதி, போக்குவரத்து வசதி எதுவும் செய்து தரப்படவில்லை. தொகுதி மக்கள் தங்களின் பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் எம்எல்ஏவிடம் போய் கேளுங்கள் என்கிறார். எம்எல்ஏவை நாங்கள் பார்த்தே பல மாதங்கள் ஆகி விட்டது. இந்த தொகுதியில் ஆளும் கட்சி தோற்று விட்டதால் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதி என்று கூட பாராமல் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினரை எங்கு சென்று பார்ப்பது என்று கூட தெரியவில்லை.

அவரை கண்டா வரச்சொல்லுங்க..

தேர்தல் வந்தால் மட்டுமே தொகுதி பக்கம் வருகிறார்களே தவிர மக்கள் பிரச்சினையைத் தீர்க்க யாரும் வருவதில்லை. கொருக்குப்பேட்டை நேரு நகர் ரயில்வே மேம்பாலம் தற்போது வரை கிடப்பில் உள்ளது. ஆர்கே நகர் தொகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையத்திலிருந்து போதிய பேருந்து வசதி இல்லை. அதனால் இந்த முறை யார் தொகுதி மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ அவர்களை ஆதரித்து வெற்றி பெற செய்வோம்.

Related Stories: