சென்னை: சசிகலா இல்லாவிட்டால் ஒரு சமுதாய ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்காது என்பது விதைக்கப்படும் கருத்து என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 11, 37வது வார்டு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ‘‘சசிகலாவை அதிமுகவில் இணைக்காவிட்டால், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமுதாய வாக்குகள் கிடைக்காது என்று பரப்பப்படும் தகவல் விதைக்கப்படும் கருத்து. அது இயற்கையான கருத்து அல்ல. தமிழ்நாட்டில் சாதி, சமய வித்தியாசம் இல்லாமல் அனைத்து சமுதாயங்களையும், அனைத்து ஜாதிகளையும் ஒருங்கிணைத்து போகக்கூடிய ஒரே கட்சி அதிமுக. ஜாதி வைத்து பேசி பிரசாரம் என்பதை என்றும் அதிமுக எடுத்தது கிடையாது.