திருமலை: தெலங்கானா மாநிலம், கரீம் நகரை சேர்ந்தவர் சீலம் ரங்கய்யா. இவரை கடந்தாண்டு மே 26ம் தேதி ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக மந்தானி காவல் நிலைய போலீசார் அழைத்து சென்றனர். அப்ேபாது, அவர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நாகமணி என்ற வக்கீல், தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து நாகமணிக்கும், அவரது கணவரான வக்கீல் கட்டுவாமன் ராவுக்கும் போலீசாரிடம் இருந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. இ து பற்றி உயர் நீதிமன்றத்திலும் முறையிட்டு பாதுகாப்பு கேட்டனர்.