வாஷிங்டன்: ‘கொரோனா தொற்று பரவல் முடிவுக்கு வந்தாலும் கூட, ஆன்லைன் கல்வி என்பது இனிமேல் நிற்காது,’ என்று கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக. உலகமே தற்போது ஆன்லைன் மூலம் இயங்கி வருகிறது. குறிப்பாக, கல்வி நிலையங்கள் அனைத்தும் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக கல்வியை அளித்து வருகிறது. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புக்களை மையமாக கொண்ட 50க்கும் மேற்பட்ட மென்பொருள் டூல்சை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், ‘‘கொரோனா தொற்று ஆபத்து எதிர்காலத்தில் நீங்கி விட்டாலும் கூட, ஆன்லைன் கற்பித்தல் என்பது இனிமேல் எங்குமே நிற்காது.